கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்-ரயிலில் வந்திறங்கும் போராட்டக்கார்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் கொழும்புக்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர்.குறிப்பாக இன்று காலை இரண்டு புகையிரதங்களின் ஊடாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இளைஞர்கள் கொழும்புக்கு வருகைதந்த காணொளிகள் வெளியாகின.போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையிலும் பேருந்துகள், லொறிகள், நடைபயணம் மற்றும் சைக்கிள்கள் ஊடாக தொடர்ந்தும் போராட்ட இடத்திற்கு மக்கள் குவிந்து வருகின்றனர்.