50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் கைது!

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று மாலை வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்ரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு 15, அளுத்மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே சோதனையின் போது கைது செய்யப்பட்டதோடு அவரிடம் 50,000 டொலர்கள் கைப்பற்றப்பட்டது.50,000 டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை நிரூபிக்கத் தவறியமைக்காக பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.