என்னை பாஸ் ஆக்குங்க ப்ளீஸ்.. கதை எழுதிய மாணவர்கள்

பீகார் மெட்ரிகுலேசன் பாடசாலை தேர்வில் மாணவர்கள் சிலர் தேர்வு தாளில் எழுதிய விடைகளை கண்டு ஆசிரியர் விழிபிதுங்கி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அதில் ஒரு மாணவி, 'சேர் நான் ஒரு ஏழை மாணவி, தயவுசெய்து என்னை பாஸ் செய்து விடுங்கள்.. இல்லையென்றால் எனது தந்தை எனக்கு திருமணம் செய்துவைத்து விடுவார்' என எழுதியுள்ளார்.

 மேலும் சில மாணவர்கள் சினிமா கதைகளையும், கவிதைகள், கதைகள் என எழுதி வைத்துள்ளனர். தேர்வு தாளை மதிப்பீடு செய்யும்போது இதனை கண்ட ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார்.