தனியார் வங்கிகள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - 30 சதவீதமாக குறைகிறது வட்டி

கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை  எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.

அதன்படி கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 30 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.

தற்போது குறித்த வட்டி வீதமானது 34 சதவீதம் வரை காணப்படுவதாக தெரியவருகிறது.

இலங்கை மத்திய வங்கி அண்மையில் வட்டி வீதங்களை குறைத்திருந்ததுடன், வர்த்தக வங்கிகளும் அதற்கேற்ப வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் அரச மற்றும் வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னதாக அறிவித்திருந்தார்.

ஆனால், 30 இற்கும் குறைவான வட்டிவீதத்தை அறவிட முடியாதென சில தனியார் வங்கிகள் மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

30 இற்கும் 34 இற்கும் இடைப்பட்ட வட்டிவீதத்தை அறவிடுவதில் வர்த்தக வங்கிகள் உறுதியாகவுள்ளன.

கடன் அட்டைகளின் வட்டி விகிதங்கள் 30மூ க்கு கீழே போகாது என்றும் தெரியவருகிறது.