மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இம்மாநாட்டுக்கான அழைப்பிதழை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதன்போது, யாழ். மாவட்ட மக்கள் கடந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த மைத்திரிபால சிறிசேன, யாழ். மாவட்ட மக்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.