உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
உயர்நிலை நியமனக் குழுவில் தாம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது ரவி செனவிரட்ன இந்த விடயத்தை கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என ரவி செனவிரட்ன தம்மிடம் கூறியதாக நிசாம்ம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கான பதவியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் போது ரவி செனவிரட்ன இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிசாம் காரியபப்ர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் இன்றைய தினம்(9) பதிவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதல்தாரிகளை கண்டு பிடித்து தண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல்களின் போது வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.