ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள்: சாடும் கோவிந்தன் கருணாகரம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தொடங்கியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மக்களாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர்.

மலையக மக்களுடன் வடக்கு கிழக்கு மக்கள் என்றும் கைகோர்த்து இருப்போம்.

அண்மையில் இடம்பெற்ற மொட்டுவின் மாநாட்டில் முன்னாள் அதிபரைக் காணவில்லை.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தற்போதே தீட்ட தொடங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.