மகிந்த பதவி விலகத் தயார்: டலஸ் புதிய பிரதமராக உடன்படும் டிலான் - பகிரங்கப்படுத்தப்படும் திட்டம்

புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்க தான் உடன்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பதுளையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார். 

இந்த நிலையில் இடைக்கால அரசாங்கத்தில் புதிய பிரதமர் சஜித் என்றால் நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன்.

எனினும் பிரதமர் டலஸ் அழகப்பெரும எனில் நான் உடன்படுவேன். மகிந்த ராஜபக்சவிற்கு இந்த பிரதமர் பதவி பெரிதல்ல. அவர் இந்த நாட்டில் யாராலும் முடியாத, தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த தலைவர்.

பிரேமதாச யுகம் என்பது யாருக்கும் தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.