முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அம்பலப்படுத்தினார்.
சபையில் இன்று உரையாற்றிய அவர்,
இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் கடந்த காலங்களில் அரசமுறை பயணங்கள் முறைகேடாக காணப்பட்டுள்ளது. 2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 3572 மில்லியன் ரூபாவும், 2015-2019 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 384 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
2020-2022 வரையான காலப்பகுதியில் கோட்டபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 126 மில்லியன் ரூபாவும், 2023-2024 வரையான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
2024.09.21 முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.
நாங்களும் சேவையாற்றியுள்ளோம், இந்த நாட்டு மக்களை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளோ
2023 -2024 வரையான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 33 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.இந்த 33 பயணங்களிலும் மொத்தமாக 154 பேர் பங்குப்பற்றியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுவரையில் 3 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர்.
ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உரிய நபர்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
இருப்பினும் கடந்த காலங்களில் உரிய தரப்பினர்களா சென்றுள்ளார்களா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றபோது அவருடன் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் சென்றார்கள்.
இதுவும் அரசியல் இலஞ்சமாகும்.பதவிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலாச்சாரத்தை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம் என்றார்.