வருடாந்த நடைமுறைகளை மாற்றிக் கொண்ட மஹிந்த



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒவ்வொரு வருட இறுதியிலும் இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு செல்வது வழமை.

ஆனால் இந்த முறை உடல்நிலை காரணமாக திருப்பதியில் வழிபட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதிக்கு செல்ல முடியாவிட்டாலும் மஹிந்த கடவுளுக்கு வருடாந்த பூஜை செய்தார். இந்த முறை வீட்டில் இருந்தே திருப்பதி பூஜையை நடத்தியுள்ளார்.

மஹிந்த தனக்கு மிகவும் நெருக்கமான தமிழ் வர்த்தகர் ஒருவரின் கைகளில் திருப்பதி கோவிலுக்கு தெய்வீக காணிக்கைகளை அனுப்பியுள்ளார்.

குறித்த வர்த்தகர் திருப்பதிக்கு சென்று மஹிந்தவிற்கு ஆசி வேண்டி பூஜை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.