மகிந்த - ரணில் நேற்று திடீர் சந்திப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை குறித்த இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ச வார இறுதி நாட்களை கழிப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரதமர் மஹிந்தவை பதவி விலகுமாறு மஹா சங்கத்தினர் உட்பட பல தரப்பினர் கடும் அழுத்தம் பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.