நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை பூட்டு!

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் சுற்றுலாத்துறைசார் சேவைகளை வழங்கும் ஹோட்டல்களில் மாத்திரம் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பிற்கு முரணாக சட்ட விரோமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்குக எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.