சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையா?

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று(செவ்வாய்கிழமை)  இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைக் குறிப்பிட்டார்.