அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலை தற்போது 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் சிகப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பு தற்போது 398 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பா 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசியின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி 179 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி 174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி 278 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.