வரக்காபொல பகுதியில் வீடொன்றின் மீது மண்சரிவு-நால்வர் மாயம்!

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த மண்சரிவின் போது 50 வயதுடைய ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 மாடி வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட ஏனைய மூவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை தற்போது மீட்பு பணியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.இதேபோல தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.