கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் கடத்தல் முயற்சி : பொலிஸார் அவசர கோரிக்கை



 கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் ஆரம்பித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
 
தாய் தனது மகளை பாடசாலையிலிருந்து தனது வாகனத்தில் அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென வாகனத்திளுள் ஏறி, மாணவி அமர்ந்திருந்த பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் சந்தேக நபர் தாயிடம் வாகனத்தை முன்னோக்கி ஓட்டுமாறு அச்சுறுத்தியுள்ளார்.
தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், சந்தேக நபரிடமிருந்து தனது மகளை இழுத்து, உதவி கேட்டு கத்தியபடி வாகனத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் மதிப்பாய்வு செய்த பாதுகாப்பு
சம்பவம் தொடர்பில் சிசிடிவி கெமரா காட்சிகளை பகுப்பாய்வு செய்யத பொலிஸார் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பாடசாலைக்கு அருகில் அதே நபர் சுற்றித் திரிவதைக் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பத்துள்ள பொலிஸார் இந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 011-2695411 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.