அநுரகுமாரவிடம் சிக்கிய முக்கிய ஆதாரங்கள் : ரணில் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியில்


பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் அடங்கிய பல புதிய கோப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  முதல் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வரைமோசடி மற்றும் ஊழல் கோப்புகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இந்தக் கோப்புகள் தம்மிடம் கிடைத்தமை தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 மோசடி மற்றும் ஊழல் மற்றும் பெரிய அளவிலான ஊழல்கள் தொடர்பான கோப்புகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் அரசின் கீழ் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.