வடக்கு ஆளுநரை சந்தித்த கேப்பாப்புலவு காணி உரிமையாளர்கள்...!

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் இன்று வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இச்சந்திப்பில் காணி உரிமையாளர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவில்  இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

அந்தவகையில் இன்றையதினம்(11) வடமாகாண ஆளுநரைச் சந்தித்த நிலையில், தமது பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக ஆளுநர் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.