கெஹெலியவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தீர்ப்பானது, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (08.04.2024) வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி 2 அன்று ​​தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்முதல் செய்ததன் தொடர்பான 10 மணிநேர விசாரணையின் பின்னர் கெஹெலிய கைது செய்யப்பட்டார். 

அதேவேளை , கெஹெலிய கைது செய்யப்படுவதற்கு முன்னர் போதைப்பொருள் கொள்வனவு மோசடி தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, கெஹெலிய மற்றும் குறித்த 07 நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.