பிரிந்திருந்த கருணா, பிள்ளையான் திடீர் இணைவு : காரணம் இதோ..!


 
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

குறித்த கட்சியில் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு  ஒப்பந்தத்தை இன்று கைச்சாத்திட்டனர்.

பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த சிவநேசதுரை சந்திரகாந்தன்,  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுடன் இந்த உள்ளுராட்சி தேர்தலை இலக்கு வைத்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் கட்சியை உருவாக்கியுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும்  உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் குறித்த தரப்பினர் களமிறங்கவுள்ளனர்.

இந்த  நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஜக்கிய  சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.