யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் கழிவுகள் அதிமாகக் கொட்டப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான மக்கள் நடமாட்டமுள்ள காக்கைதீவுப் பகுதியில் நீண்டகாலமாக மலக்கழிவுகள் மற்றும் சுகாதார கழிவுகள் அதிகமாகக் கொட்டப்பட்டு வருவதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு மட்டுமன்றி அந்த வீதியால் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமூகத்திற்கு ஒவ்வாத வகையில் சுகாதார சீர்கேடாகக் காணப்படும் காக்கைதீவுக் கழிவுகளை உடன் அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு அறிவித்ததை அடுத்து நேற்றைய தினம் அப்பகுதிக்கு சென்றஅவர் , நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் , இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.