சிறுத்தையுடன் சண்டையிட்ட ஊடகவியலாளர் - வைரல் வீடியோ



ராஜஸ்தான் மாநிலம் துங்கப்பூர் கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதனை விரட்ட முயன்றுள்ளனர்.
 
இதன்போது செய்தி சேகரிப்பிற்காக படம்பிடித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரை அந்த சிறுத்தை தாக்கியுள்ளது.
 
அவரின் காலை கடித்த சிறுத்தை விடவே இல்லை. எனினும் அந்த ஊடகவியலாளர் துணிச்சலுடன் சிறுத்தையை லாவகமாக பிடித்து மடக்கினர்.
 
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையை மீட்டனர்.
 
காயமடைந்த ஊடகவியலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

--