நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ

இலங்கையின் சர்ச்சைக்குள்ளான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியுள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ள இவர் சிங்கப்பூர் சென்ற நிலையில் இன்று (29) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவுடன் மேலும் இருவர் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெரோம் பெர்னாண்டோ, நாடு திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றுள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும், அவர் இலங்கைக்கு திரும்பிய 48 மணித்தியாலங்களில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.