யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல்!

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,நேற்று இரவு யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று யாழ் இந்திய துணை தூதுவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது யாழ். பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.