நாசாவில் கடமையாற்றிய யாழ்.தமிழர் உயிரிழந்தார்!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம் – குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த  17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்பும் குழுவில் அங்கம் வகித்தவர் தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி.

வைத்திலிங்கம் துரைசாமி பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.