சங்காவைப் போன்று உயரிய நிலைக்கு வருவதென்பது இலகுவானதல்ல : ஷாருஜன்

'குட்டி சங்கா' (டுவைவடந ளுயபெய) என எனக்கு புனைப் பெயர் சூட்டபட்டதையிட்டு பெருமை அடைகிறேன். ஆனால், அவரைப் போன்று உயர்வதாக இருந்தால் கிரிக்கெட் அரங்கில் கடுமையாக உழைக்க வேண்டிவரும் என கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவர் ஷாருஜன் சண்முகநாதன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

'எனக்கு குட்டி சங்கா என பெயர் சூட்டப்பட்டபோது நான் சிறுவனாக இருந்தேன். அதன் பெருமையை இப்போது உணர்கிறேன்.

 அவர் ஒரு கிரிக்கெட் மேதை. சங்காவைப் (குமார் சங்கக்கார) போன்று உயரிய நிலைக்கு வருவதென்பது இலகுவானதல்ல.

அதற்காக கிரிக்கெட் அரங்கில் நான் கடுமையாக உழைக்க வேண்டும். எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டும். அந்த இடத்தை அடைவதற்கு நான் சரியான நிலையில் இருக்கின்றேனா என்பது எனக்கு தெரியாது.

'என்றாலும் அடுத்த கட்டத்தை அடைவதற்கு என்னாலானமட்டும் முயற்சிப்பேன். நான் கடுமையாக உழைத்து செயல்முறையை  முறையாக பின்பற்றவேண்டும். அந்த செயல்முறையை சிறப்பாக பேணி முன்னோக்கிச் செல்லும் போது அதிர்ஷ்டமும் கைகொடுத்தால் நான் நல்ல நிலையை அடைய வாய்ப்பு கிடைக்கும். அதனை முன்னிட்டு விடாமுயற்சியுடன் விளையாடுவேன்' என சாருஜன் சண்முகநாதன் தெரிவித்தார்.