இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தத்திற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் அதேநேரத்தில் இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது எனவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டிடமும் கட்டார், ஈரான் நாட்டிடமும் அமைதி பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் போர் நிறுத்தத்திற்குப் பிறகும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அதனால் இந்த மோதல்கள் இப்போது முடிவுக்கு வருவது சாத்தியமானது அல்ல. எந்த இறுதி முடிவுகளையும் இப்போது கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமி புடினை ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி சந்தித்துப் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.