இஸ்ரேல் கொடிக்கு செருப்படி: பலஸ்தீனியர்களை ஆதரிக்கும் இலங்கை வாழ் மக்கள்


பலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலியர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புத்தளத்தில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன் மக்களை இஸ்ரேல் கொலை செய்யப்படுவமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பலஸ்தீன் இஸ்ரேல் யுத்தத்தில் பலஸ்தீன் வெற்றிப்பெறவேண்டும் என்றும் தெரிவித்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(13) ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக நகர சுற்றுவட்டாரத்தை சென்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200ற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்களினால் இஸ்ரேல் நாட்டின் கொடிக்கு செருப்பினால் அடித்து காலால் மிதித்து தீ மூட்டப்பட்டது.