நாடளாவிய ரீதியில் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ம் திகதியை கிறிஸ்மஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடிவருகின்றனர்.அதன்படி இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார கட்டுப்பாடுகளுடன் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.அத்தோடு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் யேசு பாலகனின் பிறப்பான கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்னை ஆலயத்தில் யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.இதன்போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயரினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.