இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் குண்டுதாரிகள் - அனுப்பட்ட அவசர கடிதம்

நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தமை தொடர்பில் தீவிர விசாரணை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்- செயிக் எம்.அர்கம் நுராமினினால் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, 2023.08.23 ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்தின் போது சமிந்த விஜேசிறிவி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் குண்டுதாரிகள் எமது நாட்டில் இருப்பதாகவும் அது தொடர்பில் வஜிர அபேவர்தனவிற்கு அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

கடந்த காலங்களில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவங்களினால் எமது நாட்டில் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தது என்பதை நாங்கள் அறிவோம்.

ஒரு குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் இதற்கு முன்னரே எங்களுக்கு கிடைத்த தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தபோதும், அதுதொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்காமை அல்லது தேடிப்பார்க்காமையின் காரணமாக கிறிஸ்தவ மக்கள் மாத்திரமின்றி ஒட்டுமொத்த மக்களும் பாதிப்படைந்திருந்தனர் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.