அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மஹிந்த ராஜபக்ச?-பிரதமர் பதவி பசிலுக்கா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக நாட்டில் தகவலொன்று பரவி வருகிறது.இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர்  திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலலித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ ஒரு முறை அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தார். நாட்டு மக்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. மீண்டும் அவர் ஓய்வு பெற முயற்சித்தாலும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.மேலும் இதுதான் உண்மையான கதை என்றும் அவர் விரும்பினாலும் அதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, மஹிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை அரசியலிலிருந்து ஓய்வு பெற மக்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.