பதவி விலகுகிறாரா மஹிந்த ராஜபக்ஷ?

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது, நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அமைச்சர், அப்படியான எந்த முடிவும் இல்லை என்றும் நாட்டின் பொருளாதாரம், மக்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.