நாடாளுமன்றத்திற்குள் வருகிறாரா கோட்டாபய..! தீவிர முயற்சியென தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழுவினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த மக்கள் புரட்சியை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவும் நிதி அமைச்சர் பதவியிலிருந்து பசில் ராஜபக்சவும், ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவும் விலகியிருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு சென்று தங்கியிருந்த நிலையில் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

அதேபோன்றே அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்சவும் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே மீண்டும் ராஜபக்சக்களின் ஆதிக்கத்தை கொண்டு வர பொதுஜன பெருமுன கட்சிக்குள் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.