இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அந்த அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 108 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணிசார்பில் அதிகபடியாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.