அப்பிள் ஐபோன் 15 வெளியீடு..! வெளியான புதிய அறிவிப்பு

உலகளாவிய முன்னணியான தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் தற்போது தனது இறுதி அப்டேட் ஆன ஐபோன் 15 இன் வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது.

அடுத்த தலைமுறை ஐபோன் 15 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், இந்த நிகழ்வு இரவு 10:30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன்கள் இந்த ஆண்டு பல பகுதிகளில் பாரிய மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ளது.

இருப்பினும், வடிவமைப்பு பெரிதாக மாறாமல் இருக்கலாம்.

இதுவரை கசிந்துள்ள தகவல்களின்படி, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவின் விலையை பாரிய அளவில் உயர்த்த அப்பிள் திட்டமிட்டுள்ளது.

வரவிருக்கும் ஐபோன் 15 நிகழ்வில் ஸ்மார்ட்போன்கள் தவிர மற்றைய தயாரிப்புகளை அப்பிள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.