இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது சர்வதேச நாணய நிதியம்!

நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான கருத்து பரிமாற்றத்தைத் தொடர்ந்தே சர்வதேச நாணய நிதியம் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கையுடன் Article IV கீழ், கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.