இலங்கை தமிழ்ப்பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற தமிழக அதிகாரி: தமிழக முகாமில் சம்பவம்!


தமிழக முகாமில் உள்ள இலங்கை தமிழ்ப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ய முயன்ற அரச அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தின் இரும்பூதிப்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒன்றியத்தில் அன்புராஜ் (36) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி மதியம் முகாமில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த திருமணமான 35 வயது பெண்ணிடம், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகச் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சியான அந்த பெண், அவரை தடுத்திருக்கிறார். பின்னர் அப்பெண் கூச்சலிட்ட நிலையில் அதிகாரி அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் இரும்பூதிப்பட்டி சென்ற அதிகாரி, அங்கு கடைக்கு வந்த அதே பெண்ணிடம் இதுதொடா்பாக காவல்துறையினரிடம் புகார் செய்யக்கூடாது எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குறித்த அதிகாரியை கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அன்புராஜை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.