இலங்கையருக்கு இந்தியா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa )வழங்கும் சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

பயணிகள் தங்கள் விசாக்களுக்கு விண்ணப்பிக்க indianvisaonline.gov.in/evisa/tvoa.html ஐப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.