தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன.
இந்தியா தலைமை இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியா 4-0 கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது.
இதற்கிடையே, போட்டியின் முதல்பாதியின் இறுதி நிமிடங்களில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
அதாவது, ஆட்டம் முதல் பாதி முடிவை நெருங்கியபோது, பாகிஸ்தான் வீரரின் ‘த்ரோ இன்’ முயற்சியை தடுக்க முனைந்த இந்திய பயிற்சியாளா் இகோா் ஸ்டிமேக், பந்தை அவரிடமிருந்து பறிக்க முயன்றாா்.
இதற்கு பாகிஸ்தான் வீரா்கள், உதவிப் பணியாளா்கள் ஆக்ரோஷமாக எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து இரு அணியினா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஆட்ட நடுவா்கள், அதிகாரிகள் குறுக்கிட்டு இரு தரப்பையும் விலக்கிவிட்டனா்.
The Biggest Rivalry in the sports for the reason
— Tehzeeb Hassan (@TehzeebViratian) June 21, 2023
India vs Pakistan in football ⚽ match 🔥👀🔥#INDvsPAK #INDPAK #PakistanFootball #SunilChetri #football #pakvsind #Bengaluru pic.twitter.com/bY4Essh0yp