நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி- வடை வியாபாரியின் விசித்திர விலைப்பட்டியல்!

நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளதால் தற்போது வடையின் விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்து நுகர்வோர் விசாரிப்பதால், வியாபாரி ஒருவர் வடையை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நுவரெலியா நகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் வடை விற்பனை செய்யும் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வடை விறபனை செய்யும் வியாபாரி ஒருவர், வடைகளின் விலைகளை காட்சிப்படுத்தாது, வடையை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலம் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தி வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள் காரணமாக வடையின் விலையையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக ஒரு பருப்பு வடையை 20 ரூபாவுக்கும் உளுந்து வடையை 30 ரூபாவுக்கும் சமோசா ஒன்றை 30 ரூபாவுக்கும் விற்பனை செய்து வருவதாகவும் அந்த வியாபாரி கூறியுள்ளார்.