இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டுக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் சுற்றுலா ஹோட்டல்களின் மின்சாரம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் எரிபொருளை வழங்கும் முறைமை ஏற்கனவே நாட்டில் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.