ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த சின்னத்தில் களமிறங்குவார்..? வெளியான தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு தவிர்ந்த புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பேராசிரியருமான ஆ{ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதனைத் தெரிவித்த அவர்,


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக, பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

ஜனாதிபதி தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிப்பதில் அவர் உட்பட பலருக்குப் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூறியுள்ளனர்.

அவர் மொட்டுக் கட்சியின் கீழ் போட்டியிடுவது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள எமக்கும் பிரச்சினை உள்ளது.

எனவே ரணில் விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பேராசிரியருமான ஆ{ மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி; தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவர் நிச்சயம் களமிறங்குவார் என அந்த கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும், குறித்த வேட்பாளர் யார் என்பது தொடர்பான தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர்  தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.