இடைக்கால அரசாங்கம் அமைந்தால் அது எனது தலைமையின் கீழ் தான் இருக்கும்-மகிந்த ராஜபக்ச!

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.வேறு எந்த பிரதமருடனோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து பணியாற்ற எவரும் விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இடைக்கால அரசாங்கம் அமைந்தால் அது தனது தலைமையின் கீழ் தான் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கத்துடன் பேசவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.