மகிந்த பதவி விலகவில்லை எனில் .... - மல்வத்து விகாரை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என சியாம் நிகாயாவின் மல்வத்து பிரிவின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

மகிந்த பதவி விலகவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பாகிஸ்தானில் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கானை நீக்கியது போல நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து பின்வரிசை உறுப்பினர்கள் அஸ்கிரிய மல்வத்து மகாநாயக்கரை தரிசித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.