ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று(23) முற்பகல் வேளையில் நபர் ஒருவர் சத்தமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாது மகிந்த ராஜபக்சவை ஒரு வார காலத்திற்குள் கொலை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நபர் ஒருவர் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்தே காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல் | Man Arrested Threatening To Kill Mahinda Rajapaksa

கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாயையே இவ்வாறு கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.