முதலீட்டு திட்டத்துக்காகவே வடக்கிற்கு விஜயம் செய்தேன்- ரவி கருணாநாயக்க

இலங்கைக்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே தான் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்ததாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார் .

மேலும்  தெரிவிக்கையில்  நான் ஏன் ஹெலிகாப்டரில் வடக்கே செல்ல முடியாது?  நான் அரசாங்கத்தில் இல்லாததால், நான் விரும்பியதைச் செய்ய முடியும் என தெரிவித்த அவர்  மன்னார் விஜயத்தை எதிர்மறையாக சித்தரிக்கக் கூடாது, என்றும் குறிப்பிட்டார் .