மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் : மூதூரில் சம்பவம்

மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை; கணவரே கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான 33 வயதுடைய கணவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.