சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்கள் இரத்து!

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

நாட்டில் நிலவும் போராட்டங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு  காரணமாக  தெரிவிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது .மேலும்  இந்நிலைமை இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும்  அதிகாரசபை தெரிவித்துள்ளது .