துமிந்த சில்வாவை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறும் மற்றுமோர் உத்தரவை பிறப்பித்துள்ளது. 

ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.