மழையுடனான காலநிலை – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நெலுவ – எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட சிறுவனொருவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் எம்பலேகெதர பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹங்குராங்கெத்த, ஹேவாஹெட்ட – முல்லோயா தோட்ட மேல் பிரிவில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

55 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.